"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, June 12, 2011

இலங்கை இலக்கியப் பேரவை - யாழ் இலக்கிய வட்டம் பரிசளிப்பு விழா





யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலங்கைப் பேரவை 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும் கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தினர்.

எழுத்தாளர் செங்கை ஆழியான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இலக்கியப் பேரவைச் செயலாளர் ஐ. சிவதாசன் பேரவையின் செயற்பாடுகள் பற்றி உரை நிகழ்த்தினார். கவிஞா ஐயாத்துரை விருது பெறும் பெண்ணியா> துவாரகன் ஆகியோர் பற்றிய அறிமுக உரையினை ஐ. வரதராஜன் நிகழ்த்தினார். நன்றியுரையை யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நிகழ்த்தினார். விருதுபெற்றோர் சார்பில் நன்றியுரையை கலைஞர் கலைச்செல்வன் நிகழ்த்தினார்.
பேராசிரியர் அ.சண்முகதாஸ்


இலக்கியப் பேரவைச் செயலாளர் ஐ. சிவதாசன்


பரிசில் மற்றும் சான்றிதழ் பெற்ற நூல்களும் நூலாசிரியர்களும்

மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) விருது
1. பெண்ணியாவின் ‘ஒரு நதியின் நாள்’ (கவிதை நூல்)
2. துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ (கவிதை நூல்)


இலங்கை இலக்கியப்பேரவை விருதுபெறும் ஏனைய நூல்கள்
2008 ஆம் வருடத்துக்கான பரிசும் பாராட்டும் பெறும் நூல்கள்:

நாவல் - லோமியா - எஸ்.ஏ.உதயன்
சிறுகதை - நினைவுகள் மடிவதில்லை - சிற்பி சரவணபவன்
கவிதை-இதுநதியின் நாள் - பெண்ணியா
சிறுவர் இலக்கியம் -வைரப்பனைமரம் -திருமதி சந்திரா தனபாலசிங்கம்
நாடகம் -ஒரு கலைஞரின் கதை- கலைஞர் கலைச்செல்வன்
சமயம் -1.சிவபோதச் சிற்றுரை -மட்டுவில் அ.நடராசா
2.இறைவிழுமியம்- அருட்தந்தை அ.ஸ்ரிபன் (இருவருக்கு பரிசுகள்)
பல்துறை-மனமெனும் தோணி-கோகிலா மகேந்திரன்
மொழிபெயர்ப்பு- 1.சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு -செங்கை ஆழியன்
2. சிறுவர் நீதிப் போதனைக் கதைகள்-வைரமுத்து சுந்தரேசன் (இருவருக்கான பரிசுகள்)



எஸ்.ஏ.உதயன்

திருமதி சந்திரா தனபாலசிங்கம்

2009 ஆம் ஆண்டு பரிசு பெறும் நூல்கள்:

நாவல் -துயரம் சுமப்பவர்கள் -நீ.பி.அருளானந்தம்
ஆய்வு -இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் -கலாநிதி எஸ்.ஜெபநேசன்
சிறுகதை -ஒருவருக்காக அல்ல-அமரர் து.வைத்திலிங்கம்
கவிதை-குரல்வழிக் கவிதை-அல்.அஹுமத்
சிறுவர் இலக்கிய – தீந்தேன்- பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன்
நாடகம் -கங்கையின் மைந்தன்-அகளங்கன்
சமயம்-ஞானதீபம்- சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்
பல்துறை-பண்டைத் தமிழர் பண்பாட்டுத் தடங்கள்-பேராசிரியர் கலாநிதி ம.இரகுநாதன் மொழி பெயர்ப்பு -திறந்த கதவு-திக்குவல்லை கமால்

கலைஞர் கலைச்செல்வன்


2009 சான்றிதழ் பெறும் நூல்கள்

கவிதை – 1. ‘விற்பனைக்கு ஒரு கற்பனை’ – ஆரையூர் தாமரை
2. ‘இக்பால் கவிதைகள்’ –ஏ. இக்பால்
சிறுவர் இலக்கியம் – 1.‘தாமரையின் ஆட்டம்’ கே.எம். எம் இக்பால்
2.‘குறும்புக்கார ஆமையார்’ ஓ.கே குணநாதன்
சிறுகதை – 1.‘தொலையும் பொக்கிசங்கள்’ இராஜேஸ்கண்ணன்
2.‘பாட்டுத் திறத்தாலே’ கலாநிதி த. கலாமணி
பல்துறை – 1.‘இலங்கையின் கல்வியும் இன உறவும்’ கெளரி சண்முகலிங்கன்
2.‘சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை’ – சிறீபிரசாந்தன்
நாடகம் -‘கூத்துக்கள் ஐந்து’ கலையார்வன்
நீ.பி.அருளானந்தம்

கலாநிதி எஸ்.ஜெபநேசன்


பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன்

சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்

பேராசிரியர் கலாநிதி ம.இரகுநாதன்

கெளரி சண்முகலிங்கன்

கலையார்வன்

பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா


ஐ. வரதராஜன்

பெண்ணியா


துவாரகன்


யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

கலைஞர் கலைச்செல்வன்


பதிவு- சு.குணேஸ்வரன்
படங்கள் - துவாரகன்/வ.வித்தியாதரனும் நண்பர்களும்

No comments:

Post a Comment